shabd-logo

36. மண்டோர் சமர்

19 January 2024

2 பார்த்தது 2

கேவலம், ஒரு பெண், புரவியில் இருந்து இறங்க, அவள் காலுக்குப் படியாக தனது இரு கைகளையும் கோத்து நீட்டிய பிருமச்சாரியிடம் பெரிதும் வெறுப்புக் கொண்டான், ஜகத்சிம்மன். பிருமச்சாரி உண்மையில் பெரும் போலி பிருமசாரியாக இருக்க வேண்டும் என்றும் நினைத்தான். அவன் நினைப்பு ஊர்ஜிதமாக பிருமச்சாரி இன்னொரு பணியிலும் இறங்கினார்.
ராவ்ஜோடாவின் கூடாரத்துக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்ற பிருமச்சாரி, அவளை அவன் கூடாரத்துக்குள் செல்லப் பணித்து, மேலே செருகியிருந்த கூடார வாசல் படுதாவையும் இழுத்துத் தொங்கவிட்டு மன்னருக்கும் அந்த மங்கைக்கும் சிறிது அந்தரங்கத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது அவன் இதயத்தை எரிமலையாக்கியது. ஆகவே, மீண்டும் அவர் அவனிடம் வந்தபோது “உங்கள் பணி வர வர சிறப்பாக இருக்கிறது” என்று இகழ்ச்சி ததும்பும் குரலில் கூறினான் ஜகத்சிம்மன்.
பிருமச்சாரி உபதளபதியை விஷமப் பார்வையாகப் பார்த்து “சிறப்பான பணியைத் தவிர வேறு எதிலும் இறங்கும் பழக்கம் ஹர்பாசங்க்லாவுக்குக் கிடையாது என்பதை ராஜபுதனம் அறியும்” என்று கூறினார்.
“நீர் இப்பொழுது செய்தது...” என்று இழுத்தான் உபதளபதி.
“கடமை” என்ற பிருமச்சாரி அதற்குமேல் உபதளபதியைப் பேசவிடக் கூடாது என்றுதான் நினைத்தார். ஆனால் உபதளபதி வாயை மூட மறுத்து “அரசரிடம் பெண்ணைச் சேர்ப்பதுதான் உமது கடமையா?” என்று கேட்டான்.
“அரசியை பெண் என்று சாதாரணமாக அழைப்பது ராஜத்துரோகம். இதற்கு உமது தலையைச் சீவலாம்” என்று பிருமச்சாரி சர்வ சாதாரணமாகச் சொன்னார்.
“இவள் அரசியா!” பெரும் வியப்பு ஒலித்தது ஜகத்சிம்மன் குரலில்.
“வேறு எப்படி நினைக்கிறீர்?” பிருமச்சாரி நகைத்தார்.
“அப்படியானால் மலை அரசி?”
“அவளும் அரசிதான்.”
“மன்னருக்கு இரண்டு ராணிகளா?”
“இல்லை. ஒரு ராணிதான்.”
“பிருமச்சாரி!”
“உப தளபதி.”
“நீர் உளறுகிறீர்.”
“அதனால் உமக்கு என்ன நஷ்டம்?”
“உள்ளே சென்றவள் வேட்டுவச்சி.”
“அதனால் என்ன? வேட்டுவச்சி அரசியாகக்கூடாது என்று எங்கு சொல்லியிருக்கிறது?”
ஜகத்சிம்மனுக்கு என்ன பேசுவது என்று தெரியாததால் பிருமச்சாரியை மிரட்டலானான்.
“இது மலை அரசிக்குத் தெரிந்தால் என்ன ஆகும்?” என்று வினவினான்.
“எதுவும் ஆகாது” என்ற பிருமச்சாரி, மேற்கொண்டு விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, “உபதளபதி! உம்மை தூது செல்லப் பணித்தேன். முதலில் அதைக் கவனியும்” என்று திட்டவட்டமாக அறிவித்து, கையை அசைக்கவே இரண்டு தாரைகள் பலமாக ஊதப்பட்டன.
அதே சமயத்தில் மண்டோர் கோட்டை மீது ஒரு வீரன் தோன்றினான். “என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று இரைந்து வினவவும் செய்தான்.
அதுவரை புரவிமீது அமர்ந்து இருந்த ஜகத்சிம்மன் புரவியைக் கோட்டை வாசலை நோக்கி நடக்கவிட்டு “உங்கள் தலைவர்கள் இருவரையும் பார்க்க வேண்டும், கதவைத் திற என்று கூறினான்.
“எதற்காக?”
“தூது சொல்ல வேண்டும்.”
இதை உப தளபதி கூறியதும் கதவுகள் திறந்தன. ஜகத்சிம்மன் புரவியை கம்பீரமாகச் செலுத்தி மண்டோர் நகரத்துக்குள் நுழைந்தான். காந்தோஜியும் மஞ்சாஜியும் அவனை ஆஸ்தான மண்டபத்தில் சந்தித்தார்கள். சந்தசிம்மன் புதல்வர்களும், போரில் இணையற்றவர்கள் என்று பிரசித்தி பெற்றவர்களுமான இரு ராஜபுத்திரர்களும் இரட்டையர் போல் ஒரே ஆசனத்தில் அக்கம் பக்கத்தில் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் கம்பீரத்தையும் முகத்தில் துலங்கிய அலட்சியத்தையும் கவனித்த ஜகத்சிம்மன் “சந்தசிம்மன் புதல்வர்களே! நீங்கள் அமர்ந்து இருக்கும் ஆசனம் உங்களுடையது அல்ல. ராவ்ஜோடா உட்கார வேண்டிய இடத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்கள். நீங்கள் உடனடியாக இந்த நகரத்தை விட்டு அகன்றால் உங்களைத் தடை செய்ய மாட்டோம். இல்லையேல் இன்றே போர் துவங்கும்” என்று தனது தூதைச் சொன்னான்.
உபதளபதியை ஏற இறங்கப் பார்த்தான், காந்தோஜி. “தளபதி! தூது வர உங்கள் படையில் யாரும் இல்லையா?” என்று வினவினான்.
ஜகத்சிம்மன் கண்களில் சிறிது கபடம் படர்ந்தது.
“இப்பொழுது நான் தளபதி அல்ல” என்று பதில் அளித்தான்.
“வேறு யார் தளபதி?” மஞ்சாஜியின் குரல் சந்தேகத்துடன் ஒலித்தது.
“பிருமச்சாரி.” ஜகத்சிம்மன் கபடமாகப் பேசினான்.
“யார், ஹர்பா சங்க்லாவா?” காந்தோஜி வினவினான் வியப்புடன்.
“ஆம்”
“நீர்?”
“உப தளபதி ஆக்கப்பட்டேன்.”
“யாரால்?”
“பிருமச்சாரியால்?”
“இதற்கு உங்கள் மன்னனும் உடந்தையா?”
“ஆம்.”
இதைக் கேட்ட மஞ்காஜி நகைத்தான்.
“உம்மை சரியாகத்தான் எடைபோட்டு இருக்கிறான் ஜோடா” என்றும் சொன்னான்.
அந்த நகைப்பு ஜகத்சிம்மன் இதயத்தை எரிமலை ஆக்கியது.
“மஞ்சாஜி, எங்கள் மன்னரின் நடவடிக்கைகளை விவாதிக்க நான் வரவில்லை. தூதுக்கு என்ன பதில்?” என்று வினவினான் கோபம் குரலிலும் அள்ளித் தெளிக்க.
“சந்தசிம்மன் புத்திரர்கள் சொல்லக்கூடியது ஒரே பதில்தான். நீர் வெளியே சென்ற நான்கு நாழிகைக்குள் உங்கள் படை தாக்கப்படும். படையா அது? மொத்தம் எழுநூறு பேர்கூட இருக்காத ஒரு சிறு கூட்டம். நீங்கள் போராடுவதைவிட தற்கொலை செய்துகொள்ளலாம் என்றான் மஞ்சாஜி.
காந்தோஜி சொன்னான். “சொல் உங்கள் மன்னரிடம், வீணாக வீரர்களை பலிகொடுக்க வேண்டாம். இப்பொழுதே மண்டோர் வாசலை விட்டு அகன்றால் நாங்கள் துரத்த மாட்டோம்” என்று.
ஜகத்சிம்மன் இதழ்களில் இளநகை அரும்பியது. தலை தாழ்த்தி விடை பெற்று கோட்டைக்கு வெளியே வந்தான்.
அவனை ராவ்ஜோடா, அந்த வேட்டுவப்பெண், பிருமச்சாரி மூவரும் ஒன்றாய் நின்று வரவேற்றார்கள். காந்தோஜியின் பதிலை அவர்கள் மூவருக்கும் எதிரில் நின்று அறிவித்தான் ஜகத்சிம்மன்.
பிருமச்சாரி பதில் ஏதும் பேசவில்லை ஒரு விநாடி. அவர் முகத்தில் அனுதாபம் நிரம்பி நின்றது.
“ஜோடா! ஜகத்சிம்மா! இருவரும் கேளுங்கள் உன்னிப்பாக. இன்று உள்ள நிலைமையை சந்தசிம்மன் மக்கள் சரியாக எடை போடவில்லை. அவர்கள் தோல்வி திண்ணம். ஆனால் ஒன்று சொல்கிறேன். அவர்கள் தப்ப முயன்றால் யாரும் தடை செய்யக்கூடாது. அவர்கள் ஓடினால் எல்லை வரை துரத்தலாம். ஆனால் மேவார் வம்ச இரத்தம் நமது மண்ணில் சிந்தக்கூடாது” என்று திட்டமாக அறிவித்த பிருமச்சாரி “சந்தசிம்மன் புதல்வர்கள் நமது எண்ணிக்கையைக் கண்டு அசட்டை செய்கிறார்கள். எண்ணிக்கை எப்பொழுதும் போரை வெற்றி கொண்டதில்லை. தவிர, எழுநூறு அல்ல நமது எண்ணிக்கை, அதோ பாருங்கள்” என்று கையைக் காட்டினார் தெற்கு நோக்கி. தூரத்தில் பெரும் தூசி கிளம்பிக் கொண்டு இருந்தது. போர் முரசை உடனே கொட்ட உத்தரவு இட்ட பிருமச்சாரி ஓடிச் சென்று தமது பெரும் புரவியில் ஏறினார். ஜோடாவும் புரவியில் ஏறினான். அந்த இரட்டைப் பிறவியும் ஏறினாள். ஆனால் போர்க்களத்தில் நிற்கவில்லை அவள். வேட்டுவர் மலை இருந்த திசையை நோக்கி விரைந்தாள்.
பிருமச்சாரி தமது எழுநூறு பேரையும் மூன்றாகப் பிரித்தார். அதில் ஒரு பிரிவு பெரும் மரத்தண்டு ஒன்றைக் கொண்டு கோட்டைக் கதவுகளைப் பிளக்க முயன்றது. ஆனால் அதற்கு அவசியம் இல்லாது போயிற்று. கதவுகள் கணவேகத்தில் திறந்தன. வாட்களை உயர ஆட்டிய வண்ணம் சந்தசிம்மன் புதல்வர்கள் பிருமச்சாரியின் படைக்குள் தங்கள் படையை ஊடுருவ விட்டார்கள். எதிரி படை ஊடுருவ இடம் கொடுத்த பிருமச்சாரி கொம்பு ஒன்றை தாமே வாங்கி தெற்கு நோக்கி ஊதினார். தூரத்தே தெரிந்த புழுதி மறைந்து பாபுஜியின் புரவிப்படை அசுர வேகத்தில் வந்தது. அவை மொத்தம் ஐநூறுதான். இருந்தாலும் அவற்றின் வேகத்தை சந்தசிம்மன் புதல்வர்கள் தாங்க முடியாததால் மேவார் படை சிறிது பின்னடைந்தது. எதிரியை ஊடுருவ இடம் கொடுத்த பிருமச்சாரியின் படை திடீரென நெருங்கிற்று ஒரு பக்கத்தில். மற்றொரு பக்கத்தில் பாபுஜி வாயு வேகமாகப் பாய வைத்தார் தமது அசுரவேகப் புரவிகளை. அதே சமயத்தில் வடக்கேயிருந்த மலையில் இருந்து விஷந்தோய்ந்த அம்புகள் எதிரி படைகளை நோக்கிப் பறந்து வந்தன.
இத்தனைக்கும் காந்தோஜியின் படைபலம் அதிகமாதலாலும் சகோதரர் இருவரும் மகா வீரர்கள் ஆதலாலும் போர் மும்முரமாக நடந்தது. பிருமச்சாரி பெரிய ராட்சசன் போல் மிக நீண்ட கோடரி ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அதைக் கொண்டு எதிரி வாட்களைத் தடுத்தும் எதிர்ப்பட்டவர்களை வெட்டி வீழ்த்தியும் அனாயாசமாக முன்னேறினார். அதேசமயத்தில் ராவ்ஜோடா காந்தோஜியையும் மஞ்சாஜியையும் நோக்கி முன்னேறினான்.
காந்தோஜியின் வாள் ஜோடாவின் வாளைத் தடுத்தது. மஞ்சாஜி வாளை ஓங்கவில்லை. அண்ணனையும் ஜோடாவையும் மட்டும் சமரிடவிட்டு வேறு பக்கம் திரும்பினான். அவனை நோக்கி வந்த பாபுஜியின் மலைச்சாரல் புரவிகள் அவன் படையை ஒரு கலக்கு கலக்கியது. அவன் புரவியில் இருந்து விசிறி எறியப்பட்டான். அதேசமயத்தில் ராவ் ஜோடாவின் வாள் காந்தோஜியின் வாளை ஆகாயத்தில் பறக்க விட்டது.
சந்தசிம்மன் புதல்வர்களின் பெரும்படை கட்டுக் குலைந்து கொண்டிருந்தது. மீண்டும் சந்தசிம்மன் படை நகரத்திற்குள் செல்ல முயன்ற சமயத்தில் நகரத்தில் பெரும் கூச்சல் கிளம்பியது. ஆயிரக்கணக்கான பந்தங்களைப் பிடித்துக்கொண்டு மண்டோர் மக்கள் சந்தசிம்மன் புதல்வர் படையை பின்புறத்தில் தாக்கினார்கள். அடங்கிக் கிடந்த மக்கள் எழுந்துவிட்டார்கள் என்பதை சகோதரர்கள் புரிந்துகொண்டதால் கொம்பை எடுத்து ஊதினார்கள். பிருமச்சாரியின் சிறிய படையை தாங்கள் தவறாக எடை போட்டதை உணர்ந்துகொண்டதால் படையுடன் மேவாரை நோக்கிப் பின்வாங்க முற்பட்டார்கள்.
பிருமச்சாரியின் வீரர்கள் பிசாசுகள் போல் போரிட்டதால் எதிரியின் படை பெரிதும் நசித்தது. எந்த அணிவகுப்பு முறைக்கும் சம்பந்தம் இல்லாத அணிவகுப்பை அன்று சந்தசிம்மன் புதல்வர்கள் கண்டார்கள். அடிக்கடி சிறுசிறு கூட்டங்களாகப் படையைப் பிரித்துப் போராடும் முறையை அன்றுதான் அவர்கள் கண்டார்கள். கண்டதால் வியப்புடன் வேறு வழியின்றி பின்வாங்கினார்கள். அத்துடன் கதை முடிந்தது என்று நினைத்தான் ராவ்ஜோடா. ஆனால் முடியவில்லை. ஒரு பகுதிப் படையுடன் பின்வாங்கிய மேவார் சகோதரர்களை துரத்திச் சென்றான் ஜகத்சிம்மன். அப்பொழுதுதான் அந்த எதிர்பாராத விபரீதம் நிகழ்ந்தது.

சாண்டில்யன் மூலம் மேலும் புத்தகங்கள்

40
கட்டுரைகள்
மலை அரசி
0.0
மாலை அரசி தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான வரலாற்று நாவல். பிரபல தமிழ் எழுத்தாளர் சாண்டில்யன் இந்த மனதை மயக்கும் புத்தகத்தை எழுதியுள்ளார். சாண்டில்யன் வரலாற்றுப் புனைகதைகளுக்காகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார், மேலும் அவர் தனது வரலாற்று, காதல் மற்றும் சாகச நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர், இது பெரும்பாலும் சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலங்களில் அமைக்கப்பட்டது.
1

1. சுடர்க்கொடி

15 January 2024
0
0
0

சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்

2

2. விளக்கில் விரிந்த கதை

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் மலைக்குகை வாயிலில், மரங்கள் அடர்த்தியாயிருந்ததால் இருள் கடுமையாக இருந்த அந்தப் பிராந்தியத்தில், பந்தத்தை கையில் ஏந்தி அதன் சுடர் முகத்தில் வீச சுடர்க்கொடியென்ற காரணப் பெயருக்கு முற

3

3. துணைவன்!

15 January 2024
0
0
0

விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான். முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வ

4

4. இரு விந்தைகள்

15 January 2024
0
0
0

மலை அரசியின் மதுர இதழ்களில் இருந்து உதிர்ந்த அந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டதும், வியப்பும் அச்சமும் கலந்த உணர்ச்சிகள் ராவ்ஜோடாவின் இதயத்தை மளடுருவிச் சென்றன. அப்படி அவன் நடுங்கியதை பக்கத்தில் உட்கார

5

5. நான் வருவேன்

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் குகையைவிட்டு வெளியேறிய மலை அரசி, வேகமாக மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்து சென்றதும், விளைவித்த இரண்டு விந்தைகளும் மகாவீரனான மார்வார் இளவரசனை திகில் கொள்ளச் செய்தன என்றால்,

6

6. பெண் துணை!

15 January 2024
0
0
0

பெண்ணின் லாவண்யத்தால் ஆண்மகன் அறிவு அழிந்துவிடுகிறது. கவர்ச்சியான கன்னியின் முன்பாக எந்த ஆண்மகனும் சுயபுத்தியை இழந்துவிடுகிறான். இந்தப் பழைய நிகழ்ச்சிகளுக்கு அத்தாட்சியாக நின்றான் ராவ்ஜோடா. “உனது வீ

7

7. சாகுந்தலம்

16 January 2024
1
0
0

பந்தத்தையும் அணைத்துவிட்டு இருண்ட குகைக்குள் தன்னை வா வா என்று அழைத்த அந்த பருவப் பாவையின் துணிவை நினைத்து ஜோடா திகிலுக்கு இலக்காகி நின்ற நேரத்தில், மலைஅரசியே குகை வாயிலைவிட்டு அவனை அணுகி, அவன் கையைப்

8

8. காட்டு மலர்

16 January 2024
1
0
0

பாவின் வாலிப முரட்டு முகம் அவள் வழவழத்த கழுத்தில் திடீரென அழுந்திப் புரண்டபோது, மலை அரசியின் இதயமும் அந்த வாலிபன் உள்ளத்தைப்போலவே உணர்ச்சி அலைகளில் உருண்டது. அத்தனை உணர்ச்சி எழுச்சியிலும் அரசகுமாரன்

9

9. நிலையற்ற அரசு

16 January 2024
1
0
0

மலை அரசியை “காட்டு மலர்” என்று குறிப்பிட்டதோடு தனது பேச்சை ஜோடா நிறுத்திக்கொண்டு இருந்தால் ஜகத்சிம்மனின் கோபம் தலைக்கு ஏறியிருக்காது. “இவள் மார்வார் ராணி” என்றும் சொல்லவே ஜகத்சிம்மனுக்கு கோபத்துடன் தி

10

10. பறந்த கிளி! தொடர்ந்த துன்பம்!

16 January 2024
1
0
0

மலை அரசியின் சொற்களோ உத்தரவுகளோ மந்திராலோசனை சபையில் இருந்தவர்களுக்குக் கட்டோடு பிடிக்காதிருந்தாலும் அவள் சொன்னதற்கு எல்லாம் ஜோடா தலையை ஆட்டியதால், அவள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எல்லோருமே முன

11

11. மண்டோர் ரணகளம்

16 January 2024
1
0
0

மண்டோரின் பெரும் கதவுகள் சாத்தப்பட்டதாலும் போர்முரசு பலமாக ஒலித்ததாலும் வருவது என்னவென்பதை அறிந்த புது மகாராஜாவான ராவ்ஜோடா, புரவியின் கடிவாளத்தை பிடித்த நிலையிலேயே திகைத்து அமர்ந்துவிட்ட சமயத்தில் மலை

12

12. குகையில்...!

16 January 2024
1
0
0

பெற்றோர் புரிந்த பாவம் சிலரைப் பிடித்து வாட்டுகிறது. உற்றார் செய்த பாவமும் சிலரை விடுவதில்லை. பெற்றோரும் உற்றாரும் விளைவித்த பாவங்களுக்கு எப்பாவமும் அறியாத ஜோடா இலக்கானான். பேரனான மோகுல சிம்மனை சீராட்

13

13. அவள் கனவு!

16 January 2024
1
0
0

மலை அரசியைப் பார்த்து மார்வார் இளவரசனாயிருந்து அரசனாகி, நாட்டையும் பறிகொடுத்த ராவ்ஜோடா, அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டான் என்றால், அதற்கு மூலகாரணம் அவளுடைய விபரீதமான பதில்தான். “நாம் தனித்திருப்பது உனக்

14

14. தண்டனை!

17 January 2024
1
0
0

மலை அரசியை தரையில் கிடத்திவிட்டு குகையின் வாயிலுக்கு வந்த ராவ்ஜோடாவின் செவிகளில் ஜகத்சிம்மனும் மற்ற வீரர்களும் ஏறிவந்த புரவியின் குளம்படி ஒலிகள் கூடக் கேட்கவில்லை. குகைக்கு உள்ளே மலை அரசியின் அருகாமைய

15

15. ஹர்பா சங்க்லா!

17 January 2024
0
0
0

மலை அரசியால் மன்னிக்கப்பட்டு ஜோடாகிருக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட ஜகத்சிம்மன் உடனடியாகத் திரும்பவில்லை தனது புரவியை நோக்கி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றான் பல விநாடிகள். பிறகு சட்டென்று வேகமாக நட

16

16. அந்தி வானம்

17 January 2024
0
0
0

அதிர்ஷ்டம் என்பது ஒரு மனிதனைப் பிடித்துக்கொண்டால் அவனை அது லேசில் விடுவது இல்லை. கூடியவரையில் விடாமல் தொடர்கிறது. துரதிர்ஷ்டக்காரனுக்கு புத்தி பேதலிக்கிறது. காலம் கைகொடுப்பது இல்லை. எதையும் காலங்கடந்த

17

17. வாளின் கதை!

17 January 2024
0
0
0

ஜோடாவைப்பற்றி விசாரித்ததும் மலை அரசியின் மதிமுகம் அந்திவானம் போல் சிவந்துவிட்டதைக் கண்டதுமே நைஷ்டிக பிருமச்சாரியும், எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்காதவரும், பிருமச்சாரி விரதம் கெடக்கூடாது என்ப

18

18. தேடி வந்த அதிர்ஷ்டம்!

17 January 2024
0
0
0

மார்வார் மன்னனையும் மலைக்க வைத்த அந்த விசித்திரக் கதையைச் சொல்லுமுன்பு பிருமச்சாரி அந்தச் சிறு வீட்டின் முற்றத்தை வளைத்திருந்த சுற்றுக் கட்டடத்தின்மீது உட்கார்ந்து கீழ் இருந்த முற்றத்தில் தமது கால்களை

19

19. பாலைவனக் கூடாரம்

17 January 2024
0
0
0

இரவு தந்த இருளில், மலைக்காடு வீசிய இதமான காற்றில், சாளரத்துக்கு அருகில் இருந்த மகிழ மரம் பரவவிட்ட சுகந்தத்தின் சூழ்நிலையில், மலை அரசியை சூழ்ந்து நெருக்கிய ஜோடாவின் கரங்கள் நெருக்கியதோடு நில்லாமல் இன்ப

20

20. கரிய புரவி! கழுத்தில் ஈட்டி!

18 January 2024
0
0
0

ஜோடாவின் பரம விரோதியான சந்தசிம்மனின் மூத்த மகன் காந்தாஜி தன் வாளை உருவிக்கொண்டு ராவ் ஜோடாவை அணுகுவதற்கு முன்பே ஜோடா பிருமச்சாரியளித்த தனது பெரிய வாளை உருவி எதிரியைத் தடுத்தான். அவனைச் சேர்ந்த பத்து பத

21

21. மலைச்சாரல் ஓசை

18 January 2024
0
0
0

கழுத்தில் பதித்திருந்த ஈட்டி சற்றும் அசையாமல் இருந்தாலும் அதில் ஒரு திடமும், ஈட்டியைப் பிடித்திருந்தவன் கையில் ஈவு இரக்கமற்ற ஓர் உறுதியும் இருந்ததைக் கவனித்த ராவ்ஜோடா, தான் சிறிது அசைந்தாலும் அந்த ஈட்

22

22. பரீட்சை

18 January 2024
0
0
0

பாபுஜியின் நூறு புரவிகள் ஏதோ பெரும் புயலைப் போல் மலைச்சரிவில் வந்ததாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது புரவியில் இருந்து தன்னை வீழ்த்திவிட்டதாலும் மலைப்பாறையில் புரண்ட ஜோடா வெகு துரிதமாகப் பாறையில

23

23. அடவியில் ஒரு காட்சி!

18 January 2024
0
0
0

நீண்டநாள் பிரிந்த மகனை ஆர்வத்துடன் தழுவும் தந்தை போல ஜோடாவை பல விநாடி தழுவி நின்ற பாபுஜி, கடைசியில் அவனுக்குத் தமது கைகளில் இருந்து விடுதலை அளித்தபோது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு தே

24

24. காதல் பாபமா?

18 January 2024
0
0
0

அடர்ந்த அந்த அடவிக்குள் நாலைந்து பங்கஜங்களை நீர்மட்டத்துக்குமேல் காட்டிக்கொண்டிருந்த சிறு வாவியின் கரையில் மலை அரசியும் ஜோடாவும் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டதும் இரண்டு பிருமச்சாரிகளும் தங்கள் பிரும

25

25. ஜோடாவின் துணிவு!

18 January 2024
0
0
0

பாபுஜியும், பிருமச்சாரியும் விழிப்பதைப் பார்த்த ஜோடா, “உங்கள் இருவருக்கும் வரவர சுயநம்பிக்கை போய்விட்டது” என்று ஓர் அம்பை வீசினான். அதுவரை தாங்கள் கண்ட காட்சியால் குழப்பத்தில் இருந்த இரு பிருமச்சாரி

26

26. சாவுகாரைப் பிடித்த சனியன்!

18 January 2024
0
0
0

மண்டோர் அரசின் முதலமைச்சராயிருந்து, சந்தசிம்மன் ஆக்கிரமிப்புக்குப் பின்பு அந்தப் பதவியில் இருந்து விலகி, அரண்மனையில் தமக்கு முன்னாள் மன்னனால் அளிக்கப்பட்டு இருந்த இடத்தையும் சந்தசிம்மனிடம் ஒப்புடைத்து

27

27. அடைத்த கதவு!

18 January 2024
0
0
0

காந்தோஜியின் குறுவாள் அழுந்தியதாலும், எச்சரிக்கையாலும், அவன் பின்னால் நின்றிருந்த மஞ்சாஜியின் உதடுகளில் துளிர்த்திருந்த குரூரப் புன்முறுவலாலும், சாவுகார் அஞ்சி நடுநடுங்கிவிடுவார் என்றோ, முன்னே நடந்துவ

28

28. வேடர் குடிசை மர்மம்!

18 January 2024
0
0
0

கோட்டைக் காவலன் சொன்ன செய்தியால் மலைத்த இருவரில் சாவுகாரே முதலில் திகைப்பை உதறிக்கொண்ட தன்றி சமயாசந்தர்ப்பம் தெரியாமல் கோப்தையும் காட்டினார். “காவலனே! வணிகர்களைத் தடை செய்யும் வழக்கம் மார்வாரில் கிடைய

29

29. உள்ளே ஒரு பெண் குரல்!

18 January 2024
0
0
0

அன்று பகல் முழுவதும் மார்வார் படைத்தலைவனான ஜகத்சிம்மனுக்கும் மண்டோர் கோட்டை காவலனுக்கும் உணவு முதலிய விஷயங்களில் ராஜோபசாரம் நடந்தாலும், அவ்விருவரும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் எந்த வேடனும் நேரடியாக ப

30

30. ஜோடாவின் துன்மார்க்கம்!

19 January 2024
1
0
0

மூன்று குணங்களை மனிதன் தவிர்ப்பது நல்லது. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அக்கறை காட்டுவது, ஒன்று. ஒட்டுக் கேட்பது, இரண்டு. காலதாமதம் செய்வது, மூன்று. இந்த மூன்றில் ஏதாவது ஒரு குணமே யாரையும் இக்கட்ட

31

31. மணக்கோலம்!

19 January 2024
1
0
0

வீரனாகப் படைகளை இயக்கி, இழந்த அரசை மீட்பதில் சித்தத்தை செலுத்த வேண்டிய மார்வார் மன்னன், கேவலம், பெண் மோகம் கொண்டவனாகக் குடிசையில் மறைந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை நினைத்த ஜகத்சிம்மன் வேடவர் குடிசைக் கூ

32

32. சந்திர முகம்

19 January 2024
1
0
0

மண்டோர் படைத்தலைவனான ஜகத்சிம்மன் தனது மன்னனின் திருமணத்தையே நிறுத்த முயன்றதும், அதற்காகக் கூச்சலிட்டதும் பலருக்கு கோபத்தையும் சிலருக்கு வியப்பையும் உண்டாக்கினாலும், பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவோ, திருமணப

33

33. இழந்த சொர்க்கம்

19 January 2024
1
0
0

ராவ்ஜோடாவின் அணைப்பில் இருந்த அழகியின் சந்திர வதனத்தைக் கண்டதும் ஜகத்சிம்மன் திகைப்பும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அந்த முகம் மலை அரசியின் முகம்! முகத்

34

34. பதவி இறக்கம்!

19 January 2024
1
0
0

மலை அரசியின் மறுபிம்பம் போன்ற மின்னிடையாளுடன், ஜோடா கலந்து விளையாட இருந்த சமயத்தில் பிருமச்சாரி ஹர்பாசங்கலா அங்கு தோன்றியதும் கதவைத் தட்டியதும் பரமானந்தமாயிருந்தது, மண்டோர் படைத்தலைவன் ஜகத்சிம்மனுக்கு

35

35. மீண்டும் வந்தாள்!

19 January 2024
1
0
0

மண்டோரின் படைத்தலைவனாக இருந்த தன்னை திடீரென உபதளபதியாக்கிவிட்ட மன்னன் செயலைக் கண்டு மனம் துடித்த ஜகத்சிம்மன் அந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளலாம் என்று சிந்தித்தான். அது தவிர இந்த திடீர் பதவி இறக்க

36

36. மண்டோர் சமர்

19 January 2024
1
0
0

கேவலம், ஒரு பெண், புரவியில் இருந்து இறங்க, அவள் காலுக்குப் படியாக தனது இரு கைகளையும் கோத்து நீட்டிய பிருமச்சாரியிடம் பெரிதும் வெறுப்புக் கொண்டான், ஜகத்சிம்மன். பிருமச்சாரி உண்மையில் பெரும் போலி பிருமச

37

37. மணலில் தோய்ந்த ரத்தம்

19 January 2024
1
0
0

மண்டோர் போரில் மாவீரர்களான சந்தசிம்மன் புதல்வர்கள் அடைந்த தோல்விக்குக் காரணம் தாங்கள் போரிடும் எதிரிகளின் திறனை அவர்கள் தவறாக எடைபோட்டதுதான் என்று கர்னல் ஜேம்ஸ்டாட் தமது ராஜபுதன வரலாற்று நூலில் தெளிவா

38

38. துரோகி!

19 January 2024
1
0
0

மலை அரசி தனது வளையல் கரங்களை நீட்டி தன்னைக் கைது செய்யும்படிக் கேட்டுக்கொண்டதும் காந்தோஜி தனது தம்பியின் மரணத்தையும் மறந்து வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அடைந்தான். அப்பொழுதும் மலை அரசி வேட்டுவர

39

39. வேகம்! தாகம்!

19 January 2024
1
0
0

மேவாரின் தலைநகரான சித்தூரில் இருந்து தப்பி ஓடிவந்து லூனி ஆற்றின் உப்பு நீரில் தந்தையின் மரணத்துக்கு நீராடிய அதே துறையில், கிட்டத்தட்ட அதே இடத்தில் தங்கள் வம்ச துர்ப்பாக்கியத்துக்கும் அவப் பெயருக்கும்

40

40. அரசி ஆன, மலை அரசி!

19 January 2024
1
0
0

மலை அடிவாரப் புதரில் மலை அரசி மல்லாந்து கிடந்த கோலம் மண்டோர் மன்னனின் வெறியைக் கிளறிவிடவே, அவன் உலகத்தையே மறந்து, அதுவரை நேர்ந்த நிகழ்ச்சிகளால் மனம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் உதறி அவள்

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்