shabd-logo

35. மீண்டும் வந்தாள்!

19 January 2024

2 பார்த்தது 2

மண்டோரின் படைத்தலைவனாக இருந்த தன்னை திடீரென உபதளபதியாக்கிவிட்ட மன்னன் செயலைக் கண்டு மனம் துடித்த ஜகத்சிம்மன் அந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளலாம் என்று சிந்தித்தான். அது தவிர இந்த திடீர் பதவி இறக்கத்துக்குக் காரணம் எதுவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியிலும் இறங்கினான்.
மன்னனையும் அந்த புதுப்பெண்ணையும் பற்றிதான் துப்பறிய முயன்றது ஒருவேளை காரணமாக இருக்குமோ என்று ஒரு விநாடி நினைத்தாலும் அந்த நினைப்பை உதறிவிட்டான். “நான் எத்தனை ஜாக்கிரதையாக அவர்களைக் கவனித்தேன்! அவர்கள் ஒருநாளும் நான் பார்ப்பதை ஊகித்திருக்கக்கூட முடியாது” என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டான். ஒருவேளை இந்த மாற்றத்துக்கு பிருமச்சாரியின் வீரம் காரணமாக இருக்குமோ என்றும் எண்ணினான். “அது இருக்க முடியாது. பிருமச்சாரி பெரிய வீரர். ஆனால் படைகளை நடத்தி பழக்கம் கிடையாது. போரில் வீரம் மட்டும் போதாது. படைகளை அமைப்பதும், அவற்றை நடத்துவதும் முக்கியம். போர் என்பது தனிமனிதன் சண்டையல்ல” என்று அந்த யோசனையையும் உதறினான்.
வேறொரு எண்ணமும் அவன் உள்ளத்தே எழுந்தது. மேவார் தலைநகர் நிகழ்ச்சிகள் காரணமாய் இருக்கலாமா என்றும் எண்ணமிட்டான். “இருக்க முடியாது. அது மகா இரகசியம்” என்று அதையும் தீர்த்துக் கட்டினான்.
இப்படிப் பலவாறு சிந்தித்தும் தனது பதவி இறக்கத்துக்கு உண்மைக் காரணம் புரியாததால் குழம்பிய மனதுடன் வீரர்களின் அணிவகுப்பைப் பார்த்துக்கொண்டே பிருமச்சாரியின் பக்கத்தில் நின்றான் ஜகத்சிம்மன்.
அணிவகுப்பின் தோரணை அவன் உள்ளத்துக்கு சிறிது சாந்தியையும் அளித்தது. பிருமச்சாரி புரவி வீரர்களை கண்டபடி இயக்கினார். அவர் இயக்கிய முறை சம்பிரதாயப் போருக்கோ, போரின் இலக்கண முறைக்கோ சிறிதும் சம்பந்தம் இல்லாது இருந்தது. படைப் பிரிவுகளை அனாவசியமாகத் திடீர் எனத் திருப்பினார். பத்தடி ஒரு பிரிவு நகர்ந்ததும் அதன்மீது பின் பிரிவை வேகமாக ஏவினார். முதல் பிரிவு பின்வந்த பிரிவில் இருந்து தப்ப வெகு வேகமாக அகன்றது.
வேறு மார்க்கத்தில், சில வேளைகளில் இரண்டு பிரிவுகளும் மோதும்படியாக குறுக்கே நகர்த்த முயன்றார் பிருமசாரி. அவ்வப்பொழுது சங்கடப்பட்ட பிரிவுகளைக் கண்டு ராட்சச் சிரிப்பாகச் சிரித்தார்.
இதனால் வெகுண்ட ஜகத்சிம்மன், “பிருமச்சாரி, எதற்காக நகைக்கிறீர்?” என்று வினவினான்.
பிருமச்சாரி பதில் சொல்லவில்லை. அதனால், மீண்டும் சுட்டிக்காட்டினான் மாஜி படைத்தலைவன், “உங்களைத்தான் கேட்கிறேன் பிருமச்சாரி” என்று.
பிருமச்சாரி படைப் பிரிவுகளின் அணிவகுப்பை பார்த்துக்கொண்டே “உமது கேள்வி சரியாயில்லை” என்று சீறினார்.
“என்ன தவறோ?” எரிச்சலுடன் கேட்டான் படைத்தலைவன்.
“என்னை பிருமச்சாரி என்று அழைத்தீர்.”
“நீர் பிருமச்சாரி இல்லையா?”
“தனி வாழ்க்கையில் பிருமச்சாரிதான். இப்பொழுது படைத்தலைவன். நீர் சாதாரண, எனக்கு அடங்கிய உபதளபதி. ஆகையால் அழைக்க வேண்டியபடி அழையும்.” இதை உஷ்ணமாகவே சொன்னார் ஹர்ப்சங்க்லா.
ஜகத்சிம்மனுக்கு இதைக் கேட்டதும் உள்ளூரக் கோபம் எழுந்தாலும் அதை அடக்கிக்கொண்டு “படைத்தலைவரே!” என்று அழைத்தான்.
“என்ன உபதளபதி?” இந்தக் கேள்வியில் உபதளபதி என்ற சொல்லை சிறிது அழுத்தியே சொன்னார் ஹர்பா சங்க்லா.
ஜகத்சிம்மன் அவரை ஏறெடுத்து நோக்கினான். “உமது அணிவகுப்பு முறை சரியாயில்லை” என்று கூவினான் வெறுப்பு நிரம்பிய குரலில்.
“காரணம்?”
“சம்பிரதாயத்துக்குச் சம்பந்தம் இல்லாதிருக்கிறது.”
“அவ்வளவுதானே?”
“ஆம்.”
“சம்பிரதாயங்களை அவசியமானால் உடைக்க வேண்டும்”
“சம்பிரதாயங்களை உடைத்தால் நீர் வெற்றி பெற முடியாது.”
“பார்ப்போம்.”
“பார்ப்பதற்கு ஏதும் இல்லை இதில் முறைப்படி அணிவகுப்பை நடத்தும்.”
அதுவரை ஜகத்சிம்மனைப் பார்க்காமலே பதில் சொல்லிக் கொண்டு இருந்த பிருமச்சாரி சற்றே திரும்பினார் பழைய படைத்தலைவனை நோக்கி. “இந்தப் பிரிவுகளில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா?” என்று வினவவும் செய்தார் இகழ்ச்சியுடன்.
ஜகத்சிம்மன் ஒருமுறை தனது கண்களை படைமீது ஓட்டினான்.
“சுமார் ஐந்நூறு பேர்” என்றான்.
“பேஷ்! உமது பார்வை ஆராய்ச்சி பார்வை. சரியாக ஐந்நூறு பேர்தான்” என்று சொன்ன பிருமச்சாரி “மண்டோரில் எதிரிப் படையின் பலம் தெரியுமா?” எனக் கேட்டார்.
“தெரியாது” என்றான் ஜகத்சிம்மன்.
பிருமச்சாரியின் கண்களில் விஷம் துளிர்த்தது. “அதை அறிவது உமது கடமை. அதைப் பார்க்கவில்லை. மன்னர் யாருடன் சரசமாடுகிறார் என்று பார்ப்பதில் காலத்தை விரயமாக்கியிருக்கிறீர்” என்று விஷமத்தைக் குரலிலும் காட்டினார் பிருமச்சாரி. “மன்னர் யாருடன் சரசமாடுகிறார் என்பது அவர் சொந்த விஷயம். போர் அரசாங்கத்தைப் பற்றியது. படைத்தலைவரான நீர் அதில் அக்கறை காட்டியிருக்க வேண்டும். மண்டோரில் மறைந்திருந்த உமக்கு, எதிரியின் படைபலத்தை அறிய முடியவில்லை. இங்கு இருக்கும் நான் சொல்கிறேன், கேளும். எதிரி வசம் நாலாயிரம் புரவி வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை நடத்தும் காந்தோஜியும், மஞ்சாஜியும் மகாவீரர்கள். போரில் இணையற்றவர்கள். சம்பிரதாயப் போர் அவர்களிடம் செல்லாது. ஆகையால் சிறிது முறையை மாற்றியிருக்கிறேன். இந்தப் புதுமுறையை நீங்கள் ஏற்றுக்கொள்வது நல்லது. நாளை முதல் இதை உமக்கு சொல்லித் தருகிறேன்” என்று அவர் மேலும் சொன்னார்.
இதைக் கேட்ட ஜகத்சிம்மன் பிரமை பிடித்து நின்றான். நீண்ட காலம் படைத்தலைவனாக இருந்த அவனுக்கு பிருமச்சாரி பள்ளிக்கூடம் நடத்த முயல்வது பெரிய விநோதமாக இருந்தது.
அத்தனைக்கும் ஜகத்சிம்மன் நிதானத்தை இழக்கவில்லை. ஒப்புக்கொள்வதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் அசைத்துவிட்டு, விடுதிக்குள் சென்றான்.
விடுதியின் வாயில் படியில் இருந்து சகலத்தையும் கவனித்துக்கொண்டு இருந்த ராவ்ஜோடா ஜகத்சிம்மன் அருகே வந்ததும் அவன் முதுகில் செல்லமாகத் தட்டிக் கொடுத்து “உபதளபதி! உமக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது” என்று கூறினான் உற்சாகத்துடன்.
ஜகத்சிம்மன் மன்னனை ஏறெடுத்து நோக்கினான். அவன் பார்வையில் விஷமம் மிதமிஞ்சியிருந்ததது.
“உபதளபதி ஆனது அதிர்ஷ்டமா மன்னவா?” என்று வினவினான் துயரம் நிரம்பிய குரலில்.
“பிருமச்சாரி எல்லோரையும் உபதளபதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார். ஏற்றுக்கொண்டாலும் தமது புதுமுறைகளை கற்றுக்கொள்ள அனுமதிக்கமாட்டார். உம்மை பிருமச்சாரி பெரிதும் மதிக்கிறார்” என்று உற்சாகத்துடன் கூறிய மன்னன், ஜகத்சிம்மனை அழைத்துக்கொண்டு காலை உணவு அருந்தச் சென்றான்.
உணவுச்சாலையில் மற்றோர் ஆச்சரியம் காத்திருந்தது ஜகத்சிம்மனுக்கு. இருவருக்கும் சிற்றுண்டியை மலை அரசியே பரிமாறினாள்.
அவள் மலை அரசியா அல்லது அவளது இரட்டைப் பிறவியா என்பதை அறிய முடியாததால் சிறிது தயங்கிய ஜகத்சிம்மன் “மண்டோர் மகாராணி! நீங்கள் உணவு படைப்பது சரியா! அதுவும் கேவலம் ஓர் உபதளபதிக்கு உங்கள் கையால் பரிமாறுகிறீர்கள்....” என்றான்.
மலைஅரசி மதுரமாக நகைத்தாள். “நீங்கள் இப்பொழுது உபதளபதி அல்ல” என்றாள்.
ஜகத்சிம்மன் அதிர்ச்சி அடைந்து மலை அரசியையும் மன்னனையும் நோக்கினான்.
“அந்தப் பதவியும் போய் விட்டதா எனக்கு?” என்று கேட்டான் அச்சத்துடன்.
மலை அரசி மீண்டும் சிரித்தாள். “உங்களுக்கு எந்தப் பதவியும் போகவில்லை. இங்கு உணவு அருந்தும்போது உங்களுக்கு மன்னரின் நண்பர் என்ற ஒரே பதவிதான். எனக்கும் மனைவி என்ற ஒரே பதவிதான். ஆகையால் உங்களுக்குப் பரிமாறுவதில் எனக்கு எந்தவிதக் குறைபாடும் கிடையாது” என்று கூறிவிட்டுப் பரிமாறினாள்.
காலை உணவை அருந்திய ஜகத்சிம்மன் அன்று முழுவதும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். எப்படியும் அந்த இன்னொரு பெண்ணைக் கண்டுபிடித்து இரகசியத்தை உடைத்துவிட்டால் மன்னன் வண்டவாளம் வெளிப்பட்டுவிடும் என்று நினைத்தான். அப்புறம் தத்தளிக்க வேண்டியது மன்னன்தான் என்றும் தீர்மானித்தான்.
ஆனால் அன்றும் மறுநாளும் அந்த இரட்டைப் பிறவியைக் காணவில்லை. இரவில் காட்டுக்குள் சென்றும் பார்த்தான். அங்கு மன்னனும் வரவில்லை, அவன் ஆசை நாயகியும் வரவில்லை. அடுத்த மூன்று நாளும் இதே கதிதான். போதாக்குறைக்கு பிற்பகலில் பிருமச்சாரி அவனுக்கு பள்ளிக்கூடம் நடத்தினார். அதற்கு மன்னனும் வந்தான். புதுமுறைப் போர் நுட்பங்களை பிருமச்சாரி இருவருக்கும் போதித்தார். முதலில் புது முறையை சுத்த பைத்தியக்காரத்தனம் என்று நினைத்த ஜகத்சிம்மன், அதன் நுட்பங்களைக் கண்டுபிரமித்தான். மன்னனுக்கும் அந்த முறைகள் வியப்பையும் மகிழ்ச்சியையும் புது அறிவையும் ஒருங்கே அளித்தன.
நாட்கள் ஓடின.
ஜகத்சிம்மனுக்கும் மன்னனுக்கும் புதுமுறைப் போரை தொடர்ந்து போதித்தார் பிருமச்சாரி. உபதளபதியையும் மன்னனையும் இரண்டு பிரிவுகளுக்குத் தலைவர்கள் ஆக்கி வேகமாக அவற்றை இயக்கினார். அப்பொழுது இருவருமே புரிந்துகொண்டனர், அந்த வாயுவேகப் போரை எதிரி சமாளிப்பது நடவாது என்ற உண்மையை.
இத்தனையிலும் ஜகத்சிம்மன் மனம் அந்த இன்னொரு பெண் மீதே இருந்தது. ஆனால் அவள் அடியோடு சுவடு தெரியாமல் மறைந்துவிட்டாள். பவுர்ணமியும் நெருங்கிக் கொண்டிருந்தது. பவுர்ணமிக்கு இரண்டு நாள் முன்பு படைகளுடன் பிருமச்சாரி புறப்பட்டார், மண்டோரை நோக்கி.
மன்னனும் உபதளபதியும் அவருக்குப் பின்னால் புரவிகளில் சென்றார்கள். பவுர்ணமியின் காலையில் பிருமச்சாரி மண்டோர் முன்பாக பாசறை அமைத்தார். தமக்கும் மன்னருக்கும் உபதளபதிக்கும் தனித்தனி கூடாரங்களை அமைத்தார். அன்று பகலில் உபதளபதியை அழைத்து “உபதளபதி! நீர் தூது செல்லும், சந்தசிம்மன் புத்திரர்களிடம். மண்டோரை விட்டு அவர்களை விலகச் சொல்லுங்கள். இல்லையேல் இன்றே போர் என்று கூறுங்கள்” என்று உத்தரவிட்டார்.
அதே சமயத்தில் ராவ்ஜோடாவின் போர் முரசுகள் பயங்கரமாக ஒலித்தன.
தூது செல்ல புரவி மீது அமர்ந்து கிளம்பினான் ஜகத்சிம்மன். கிளம்பிய சமயத்தில் தூரத்தே தெரிந்த வேட்டுவர் மலையையும் நோக்கினான் ஒருமுறை. புரவியின் கடிவாளத்தை இழுத்துவிட்டு புரவியை நடத்த முயன்றவன் சட்டென்று நின்றான்.
வேடர் மலை இருந்த திக்கில் இருந்து அந்த இரட்டைப் பிறவி வந்துகொண்டிருந்தாள், புரவி மீது ஏறி. அப்பொழுது அவள் உடையில் பெரும் மாற்றம் இருந்தது. வேட்டுவர் உடையை அவளும் அணிந்திருந்தாள். உடலை அரைகுறையாகச் சுற்றிப் புலித்தோல் ஆடை, தலைக்குழலில் ஒரு பறவை இறகு, கையில் வில்லும் அம்பும். இந்தக் கோலத்தில் புரவியை ராஜ நடைபோட்டு நடக்க வைத்து பிருமச்சாரியின் பாசறையை அணுகினாள். ஜகத்சிம்மனை அசரவைத்தது, இது மட்டும் அல்ல. கூடாரத்தை விட்டு வெளிவந்த பிருமச்சாரி அவளை மிகுந்த குதூகலத்துடன் வரவேற்றார், அவளுக்குத் தலையும் வணங்கினார். புரவியில் இருந்து அவள் இறங்க தனது இரு கைகளில், விரல்களையும் சேர்த்துப் படியாக்கி அவள் காலை நோக்கி நீட்டினார்.

சாண்டில்யன் மூலம் மேலும் புத்தகங்கள்

40
கட்டுரைகள்
மலை அரசி
0.0
மாலை அரசி தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான வரலாற்று நாவல். பிரபல தமிழ் எழுத்தாளர் சாண்டில்யன் இந்த மனதை மயக்கும் புத்தகத்தை எழுதியுள்ளார். சாண்டில்யன் வரலாற்றுப் புனைகதைகளுக்காகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார், மேலும் அவர் தனது வரலாற்று, காதல் மற்றும் சாகச நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர், இது பெரும்பாலும் சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலங்களில் அமைக்கப்பட்டது.
1

1. சுடர்க்கொடி

15 January 2024
0
0
0

சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்

2

2. விளக்கில் விரிந்த கதை

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் மலைக்குகை வாயிலில், மரங்கள் அடர்த்தியாயிருந்ததால் இருள் கடுமையாக இருந்த அந்தப் பிராந்தியத்தில், பந்தத்தை கையில் ஏந்தி அதன் சுடர் முகத்தில் வீச சுடர்க்கொடியென்ற காரணப் பெயருக்கு முற

3

3. துணைவன்!

15 January 2024
0
0
0

விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான். முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வ

4

4. இரு விந்தைகள்

15 January 2024
0
0
0

மலை அரசியின் மதுர இதழ்களில் இருந்து உதிர்ந்த அந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டதும், வியப்பும் அச்சமும் கலந்த உணர்ச்சிகள் ராவ்ஜோடாவின் இதயத்தை மளடுருவிச் சென்றன. அப்படி அவன் நடுங்கியதை பக்கத்தில் உட்கார

5

5. நான் வருவேன்

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் குகையைவிட்டு வெளியேறிய மலை அரசி, வேகமாக மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்து சென்றதும், விளைவித்த இரண்டு விந்தைகளும் மகாவீரனான மார்வார் இளவரசனை திகில் கொள்ளச் செய்தன என்றால்,

6

6. பெண் துணை!

15 January 2024
0
0
0

பெண்ணின் லாவண்யத்தால் ஆண்மகன் அறிவு அழிந்துவிடுகிறது. கவர்ச்சியான கன்னியின் முன்பாக எந்த ஆண்மகனும் சுயபுத்தியை இழந்துவிடுகிறான். இந்தப் பழைய நிகழ்ச்சிகளுக்கு அத்தாட்சியாக நின்றான் ராவ்ஜோடா. “உனது வீ

7

7. சாகுந்தலம்

16 January 2024
1
0
0

பந்தத்தையும் அணைத்துவிட்டு இருண்ட குகைக்குள் தன்னை வா வா என்று அழைத்த அந்த பருவப் பாவையின் துணிவை நினைத்து ஜோடா திகிலுக்கு இலக்காகி நின்ற நேரத்தில், மலைஅரசியே குகை வாயிலைவிட்டு அவனை அணுகி, அவன் கையைப்

8

8. காட்டு மலர்

16 January 2024
1
0
0

பாவின் வாலிப முரட்டு முகம் அவள் வழவழத்த கழுத்தில் திடீரென அழுந்திப் புரண்டபோது, மலை அரசியின் இதயமும் அந்த வாலிபன் உள்ளத்தைப்போலவே உணர்ச்சி அலைகளில் உருண்டது. அத்தனை உணர்ச்சி எழுச்சியிலும் அரசகுமாரன்

9

9. நிலையற்ற அரசு

16 January 2024
1
0
0

மலை அரசியை “காட்டு மலர்” என்று குறிப்பிட்டதோடு தனது பேச்சை ஜோடா நிறுத்திக்கொண்டு இருந்தால் ஜகத்சிம்மனின் கோபம் தலைக்கு ஏறியிருக்காது. “இவள் மார்வார் ராணி” என்றும் சொல்லவே ஜகத்சிம்மனுக்கு கோபத்துடன் தி

10

10. பறந்த கிளி! தொடர்ந்த துன்பம்!

16 January 2024
1
0
0

மலை அரசியின் சொற்களோ உத்தரவுகளோ மந்திராலோசனை சபையில் இருந்தவர்களுக்குக் கட்டோடு பிடிக்காதிருந்தாலும் அவள் சொன்னதற்கு எல்லாம் ஜோடா தலையை ஆட்டியதால், அவள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எல்லோருமே முன

11

11. மண்டோர் ரணகளம்

16 January 2024
1
0
0

மண்டோரின் பெரும் கதவுகள் சாத்தப்பட்டதாலும் போர்முரசு பலமாக ஒலித்ததாலும் வருவது என்னவென்பதை அறிந்த புது மகாராஜாவான ராவ்ஜோடா, புரவியின் கடிவாளத்தை பிடித்த நிலையிலேயே திகைத்து அமர்ந்துவிட்ட சமயத்தில் மலை

12

12. குகையில்...!

16 January 2024
1
0
0

பெற்றோர் புரிந்த பாவம் சிலரைப் பிடித்து வாட்டுகிறது. உற்றார் செய்த பாவமும் சிலரை விடுவதில்லை. பெற்றோரும் உற்றாரும் விளைவித்த பாவங்களுக்கு எப்பாவமும் அறியாத ஜோடா இலக்கானான். பேரனான மோகுல சிம்மனை சீராட்

13

13. அவள் கனவு!

16 January 2024
1
0
0

மலை அரசியைப் பார்த்து மார்வார் இளவரசனாயிருந்து அரசனாகி, நாட்டையும் பறிகொடுத்த ராவ்ஜோடா, அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டான் என்றால், அதற்கு மூலகாரணம் அவளுடைய விபரீதமான பதில்தான். “நாம் தனித்திருப்பது உனக்

14

14. தண்டனை!

17 January 2024
1
0
0

மலை அரசியை தரையில் கிடத்திவிட்டு குகையின் வாயிலுக்கு வந்த ராவ்ஜோடாவின் செவிகளில் ஜகத்சிம்மனும் மற்ற வீரர்களும் ஏறிவந்த புரவியின் குளம்படி ஒலிகள் கூடக் கேட்கவில்லை. குகைக்கு உள்ளே மலை அரசியின் அருகாமைய

15

15. ஹர்பா சங்க்லா!

17 January 2024
0
0
0

மலை அரசியால் மன்னிக்கப்பட்டு ஜோடாகிருக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட ஜகத்சிம்மன் உடனடியாகத் திரும்பவில்லை தனது புரவியை நோக்கி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றான் பல விநாடிகள். பிறகு சட்டென்று வேகமாக நட

16

16. அந்தி வானம்

17 January 2024
0
0
0

அதிர்ஷ்டம் என்பது ஒரு மனிதனைப் பிடித்துக்கொண்டால் அவனை அது லேசில் விடுவது இல்லை. கூடியவரையில் விடாமல் தொடர்கிறது. துரதிர்ஷ்டக்காரனுக்கு புத்தி பேதலிக்கிறது. காலம் கைகொடுப்பது இல்லை. எதையும் காலங்கடந்த

17

17. வாளின் கதை!

17 January 2024
0
0
0

ஜோடாவைப்பற்றி விசாரித்ததும் மலை அரசியின் மதிமுகம் அந்திவானம் போல் சிவந்துவிட்டதைக் கண்டதுமே நைஷ்டிக பிருமச்சாரியும், எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்காதவரும், பிருமச்சாரி விரதம் கெடக்கூடாது என்ப

18

18. தேடி வந்த அதிர்ஷ்டம்!

17 January 2024
0
0
0

மார்வார் மன்னனையும் மலைக்க வைத்த அந்த விசித்திரக் கதையைச் சொல்லுமுன்பு பிருமச்சாரி அந்தச் சிறு வீட்டின் முற்றத்தை வளைத்திருந்த சுற்றுக் கட்டடத்தின்மீது உட்கார்ந்து கீழ் இருந்த முற்றத்தில் தமது கால்களை

19

19. பாலைவனக் கூடாரம்

17 January 2024
0
0
0

இரவு தந்த இருளில், மலைக்காடு வீசிய இதமான காற்றில், சாளரத்துக்கு அருகில் இருந்த மகிழ மரம் பரவவிட்ட சுகந்தத்தின் சூழ்நிலையில், மலை அரசியை சூழ்ந்து நெருக்கிய ஜோடாவின் கரங்கள் நெருக்கியதோடு நில்லாமல் இன்ப

20

20. கரிய புரவி! கழுத்தில் ஈட்டி!

18 January 2024
0
0
0

ஜோடாவின் பரம விரோதியான சந்தசிம்மனின் மூத்த மகன் காந்தாஜி தன் வாளை உருவிக்கொண்டு ராவ் ஜோடாவை அணுகுவதற்கு முன்பே ஜோடா பிருமச்சாரியளித்த தனது பெரிய வாளை உருவி எதிரியைத் தடுத்தான். அவனைச் சேர்ந்த பத்து பத

21

21. மலைச்சாரல் ஓசை

18 January 2024
0
0
0

கழுத்தில் பதித்திருந்த ஈட்டி சற்றும் அசையாமல் இருந்தாலும் அதில் ஒரு திடமும், ஈட்டியைப் பிடித்திருந்தவன் கையில் ஈவு இரக்கமற்ற ஓர் உறுதியும் இருந்ததைக் கவனித்த ராவ்ஜோடா, தான் சிறிது அசைந்தாலும் அந்த ஈட்

22

22. பரீட்சை

18 January 2024
0
0
0

பாபுஜியின் நூறு புரவிகள் ஏதோ பெரும் புயலைப் போல் மலைச்சரிவில் வந்ததாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது புரவியில் இருந்து தன்னை வீழ்த்திவிட்டதாலும் மலைப்பாறையில் புரண்ட ஜோடா வெகு துரிதமாகப் பாறையில

23

23. அடவியில் ஒரு காட்சி!

18 January 2024
0
0
0

நீண்டநாள் பிரிந்த மகனை ஆர்வத்துடன் தழுவும் தந்தை போல ஜோடாவை பல விநாடி தழுவி நின்ற பாபுஜி, கடைசியில் அவனுக்குத் தமது கைகளில் இருந்து விடுதலை அளித்தபோது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு தே

24

24. காதல் பாபமா?

18 January 2024
0
0
0

அடர்ந்த அந்த அடவிக்குள் நாலைந்து பங்கஜங்களை நீர்மட்டத்துக்குமேல் காட்டிக்கொண்டிருந்த சிறு வாவியின் கரையில் மலை அரசியும் ஜோடாவும் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டதும் இரண்டு பிருமச்சாரிகளும் தங்கள் பிரும

25

25. ஜோடாவின் துணிவு!

18 January 2024
0
0
0

பாபுஜியும், பிருமச்சாரியும் விழிப்பதைப் பார்த்த ஜோடா, “உங்கள் இருவருக்கும் வரவர சுயநம்பிக்கை போய்விட்டது” என்று ஓர் அம்பை வீசினான். அதுவரை தாங்கள் கண்ட காட்சியால் குழப்பத்தில் இருந்த இரு பிருமச்சாரி

26

26. சாவுகாரைப் பிடித்த சனியன்!

18 January 2024
0
0
0

மண்டோர் அரசின் முதலமைச்சராயிருந்து, சந்தசிம்மன் ஆக்கிரமிப்புக்குப் பின்பு அந்தப் பதவியில் இருந்து விலகி, அரண்மனையில் தமக்கு முன்னாள் மன்னனால் அளிக்கப்பட்டு இருந்த இடத்தையும் சந்தசிம்மனிடம் ஒப்புடைத்து

27

27. அடைத்த கதவு!

18 January 2024
0
0
0

காந்தோஜியின் குறுவாள் அழுந்தியதாலும், எச்சரிக்கையாலும், அவன் பின்னால் நின்றிருந்த மஞ்சாஜியின் உதடுகளில் துளிர்த்திருந்த குரூரப் புன்முறுவலாலும், சாவுகார் அஞ்சி நடுநடுங்கிவிடுவார் என்றோ, முன்னே நடந்துவ

28

28. வேடர் குடிசை மர்மம்!

18 January 2024
0
0
0

கோட்டைக் காவலன் சொன்ன செய்தியால் மலைத்த இருவரில் சாவுகாரே முதலில் திகைப்பை உதறிக்கொண்ட தன்றி சமயாசந்தர்ப்பம் தெரியாமல் கோப்தையும் காட்டினார். “காவலனே! வணிகர்களைத் தடை செய்யும் வழக்கம் மார்வாரில் கிடைய

29

29. உள்ளே ஒரு பெண் குரல்!

18 January 2024
0
0
0

அன்று பகல் முழுவதும் மார்வார் படைத்தலைவனான ஜகத்சிம்மனுக்கும் மண்டோர் கோட்டை காவலனுக்கும் உணவு முதலிய விஷயங்களில் ராஜோபசாரம் நடந்தாலும், அவ்விருவரும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் எந்த வேடனும் நேரடியாக ப

30

30. ஜோடாவின் துன்மார்க்கம்!

19 January 2024
1
0
0

மூன்று குணங்களை மனிதன் தவிர்ப்பது நல்லது. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அக்கறை காட்டுவது, ஒன்று. ஒட்டுக் கேட்பது, இரண்டு. காலதாமதம் செய்வது, மூன்று. இந்த மூன்றில் ஏதாவது ஒரு குணமே யாரையும் இக்கட்ட

31

31. மணக்கோலம்!

19 January 2024
1
0
0

வீரனாகப் படைகளை இயக்கி, இழந்த அரசை மீட்பதில் சித்தத்தை செலுத்த வேண்டிய மார்வார் மன்னன், கேவலம், பெண் மோகம் கொண்டவனாகக் குடிசையில் மறைந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை நினைத்த ஜகத்சிம்மன் வேடவர் குடிசைக் கூ

32

32. சந்திர முகம்

19 January 2024
1
0
0

மண்டோர் படைத்தலைவனான ஜகத்சிம்மன் தனது மன்னனின் திருமணத்தையே நிறுத்த முயன்றதும், அதற்காகக் கூச்சலிட்டதும் பலருக்கு கோபத்தையும் சிலருக்கு வியப்பையும் உண்டாக்கினாலும், பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவோ, திருமணப

33

33. இழந்த சொர்க்கம்

19 January 2024
1
0
0

ராவ்ஜோடாவின் அணைப்பில் இருந்த அழகியின் சந்திர வதனத்தைக் கண்டதும் ஜகத்சிம்மன் திகைப்பும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அந்த முகம் மலை அரசியின் முகம்! முகத்

34

34. பதவி இறக்கம்!

19 January 2024
1
0
0

மலை அரசியின் மறுபிம்பம் போன்ற மின்னிடையாளுடன், ஜோடா கலந்து விளையாட இருந்த சமயத்தில் பிருமச்சாரி ஹர்பாசங்கலா அங்கு தோன்றியதும் கதவைத் தட்டியதும் பரமானந்தமாயிருந்தது, மண்டோர் படைத்தலைவன் ஜகத்சிம்மனுக்கு

35

35. மீண்டும் வந்தாள்!

19 January 2024
1
0
0

மண்டோரின் படைத்தலைவனாக இருந்த தன்னை திடீரென உபதளபதியாக்கிவிட்ட மன்னன் செயலைக் கண்டு மனம் துடித்த ஜகத்சிம்மன் அந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளலாம் என்று சிந்தித்தான். அது தவிர இந்த திடீர் பதவி இறக்க

36

36. மண்டோர் சமர்

19 January 2024
1
0
0

கேவலம், ஒரு பெண், புரவியில் இருந்து இறங்க, அவள் காலுக்குப் படியாக தனது இரு கைகளையும் கோத்து நீட்டிய பிருமச்சாரியிடம் பெரிதும் வெறுப்புக் கொண்டான், ஜகத்சிம்மன். பிருமச்சாரி உண்மையில் பெரும் போலி பிருமச

37

37. மணலில் தோய்ந்த ரத்தம்

19 January 2024
1
0
0

மண்டோர் போரில் மாவீரர்களான சந்தசிம்மன் புதல்வர்கள் அடைந்த தோல்விக்குக் காரணம் தாங்கள் போரிடும் எதிரிகளின் திறனை அவர்கள் தவறாக எடைபோட்டதுதான் என்று கர்னல் ஜேம்ஸ்டாட் தமது ராஜபுதன வரலாற்று நூலில் தெளிவா

38

38. துரோகி!

19 January 2024
1
0
0

மலை அரசி தனது வளையல் கரங்களை நீட்டி தன்னைக் கைது செய்யும்படிக் கேட்டுக்கொண்டதும் காந்தோஜி தனது தம்பியின் மரணத்தையும் மறந்து வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அடைந்தான். அப்பொழுதும் மலை அரசி வேட்டுவர

39

39. வேகம்! தாகம்!

19 January 2024
1
0
0

மேவாரின் தலைநகரான சித்தூரில் இருந்து தப்பி ஓடிவந்து லூனி ஆற்றின் உப்பு நீரில் தந்தையின் மரணத்துக்கு நீராடிய அதே துறையில், கிட்டத்தட்ட அதே இடத்தில் தங்கள் வம்ச துர்ப்பாக்கியத்துக்கும் அவப் பெயருக்கும்

40

40. அரசி ஆன, மலை அரசி!

19 January 2024
1
0
0

மலை அடிவாரப் புதரில் மலை அரசி மல்லாந்து கிடந்த கோலம் மண்டோர் மன்னனின் வெறியைக் கிளறிவிடவே, அவன் உலகத்தையே மறந்து, அதுவரை நேர்ந்த நிகழ்ச்சிகளால் மனம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் உதறி அவள்

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்