போர்ட் பிளேர்: அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் அதிரவைத்தது. இந்நிலநடுக்கம் ரிக்டரில் 4.3 அலகுகளாக பதிவாகி இருந்தது. நேபாளத்தைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நேற்று அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நேபாளம், ஆப்கானிஸ்தான் நிலநடுக்கங்கள் வட இந்திய மாநிலங்களையும் அதிரவைத்தன.
இந்நிலையில் இன்று அதிகாலை 3.20 மணிக்கு அந்தமான் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.3 அலகுகளாகப் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் அக்டோபர் 8ஆம் தேதி ரிக்டர் அளவுகோலில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 8 ஆம் தேதி காலை 7:22 மணிக்கு 26 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று NCS மேலும் தெரிவித்துள்ளது.
"நிலநடுக்கம் ரிக்டர் அளவு: 3.2 08-10-2023 அன்று ஏற்பட்டது, 07:22:13 IST, லேட்: 25.10 மற்றும் நீளம்: 93.86, ஆழம்: 26 கி.மீ., இடம்: காங்போக்பி, மணிப்பூர்," NCS இன் அதிகாரப்பூர்வ கைப்பிடியில் ஒரு இடுகையைப் படிக்கவும் X இல்.