அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியில், தமிழ் சினிமா நடிகர் சதீஷ் மைதானத்தில் ‘வந்தே மாதரம்’ பாடல் பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியில், தமிழ் சினிமா நடிகர் சதீஷ் மைதானத்தில் ‘வந்தே மாதம்’ பாடல் பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியை இந்தியாவின் பிரபலங்கள் பலரும் நேரில் கண்டுகளித்தனர். அந்த வகையில், தமிழ் சினிமா நடிகர் சதீஷ் இந்தியா - பாக்ஸ்தான் கிரிக்கெட் போட்டியை அஹமதாபாத் சென்று நேரில் பார்த்தார். இந்த போட்டியில் இந்தியாவின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், மைதானத்தில் இருந்த நடிகர் சதீஷ் வந்தே மாதரம் பாடலை பாடி கொண்டாடிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராமல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி மிக எளிதாக பாகிஸ்தான் அணியை வென்றதை அடுத்து, மைதானத்தில் இருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்தே மாதரம் பாடலை பாடி கொண்டாடினர். அப்போது அவர்களுடன் இணைந்து நடிகர் சதீஷும் வந்தே மாதரம் பாடலை பாடியுள்ளார்
இந்த வீடியோவுக்கு ரசிகர் ஒருவர் கமெண்ட் பதிவு செய்த போது “நடிகர் சதீஷ் பார்க்கும் மேட்ச் எல்லாம் இந்தியா வெற்றி பெற்றுள்ளது, எனவே தயவு செய்து நீங்கள் உலக கோப்பை இறுதி போட்டிக்கும் சென்று விடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.