10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இரவு 8 மணிக்கு மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன. இதையடுத்து இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் யு மும்பா - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.
நடப்பு சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 2ல் வெற்றி, 8ல் தொடர் தோல்வி என 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து முன்னேற அந்த அணி ஆறுதல் வெற்றி பெறுமா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.