கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ், தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பத்தில் நடைபெற்று வந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் காரணமாக படப்பிடிப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தனுஷ் பொங்கல் தினத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு, தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுன் தொடங்கப்பட்ட நிலையில், திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அல்பிரி பகுதியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனிடையே படப்பிடிப்பு நடைபெறும் பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால் வாகனங்கள் மாற்றுப்பதையில் திருப்பிவிடப்படடன. இதன் காரணமாக படக்குழு மீது புகார் அளிக்கப்பட்டது. அப்பகுதியில் ஆம்புலன்ஸ்கள் செல்லவும் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.