பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
செழியன் – ஜெனி பிரச்சனை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், கோர்ட்டில் ஜெனியை சந்தித்து செழியன் பேசியுள்ளார். அப்போது பாக்யாவுக்கு அமைச்சரிடம் இருந்து போன் வர அவரும் உடனடியாக கிளம்பி போகிறார். அங்கு அமைச்சர் பாக்யாவுக்கு 3 நாட்கள் சமையல் ஆர்டர் கொடுக்கிறார். இதனால் பாக்யாவுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
இந்த பக்கம் வீட்டில் ராமமூர்த்தி, ஈஸ்வரி கோபி, இனியா ஆகியோர் கோர்ட்டில் என்ன நடந்துது என்பதை பற்றி யோசித்துக்கொண்டிருக்க, அங்கு வரும் பாக்யா, செழியன் வெளியில் சென்றிருக்கிறான். சீக்கிரம் வந்துவிடுவான் என்று சொல்லிவிட்டு, அமைச்சர் கொடுத்த சமையல் ஆர்டர் குறித்து சொல்கிறார். இதை கேட்ட ராமமூர்த்திக்கு மகிழ்ச்சி ஏற்பட்ட நிலையில், இனியா பாக்யாவை பாராட்டுகிறாள்.
இதை அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருக்கும், கோபி பொறாமையில் அங்கிருந்து கிளம்புகிறார். அடுத்து ஜெனியின் குழந்தைக்கு ஞானஸ்தானம் செய்வதற்காக, சர்ச்சில் பேசிவிட்டு வரும் ஜோசப், அதை மரியத்திடம் சொல்ல, மரியம் ஜெயினிடம் சொல்கிறாள். இதை கேட்ட ஜெனி, யாரை கேட்டு முடிவு பண்ணீங்க, இதை பற்றி செழியனிடம் சொல்ல வேண்டும். அவங்க வீட்டில் கேட்க வேண்டும் என்று சொல்கிறாள்.